'தற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு

தேசிய குற்றவியல் பதிவு மையத்தில் பதிவாகியுள்ள புள்ளிவிபரத்தின்படி டெல்லி. பெங்களூர், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. சென்னையில் 2,438 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதேபோல் டெல்லியில் 1,385 பேரும். மும்பையில் 1,162 பேரும் தற்கொலை செய்து மரணமடைந்ததாக பதிவாகியுள்ளன.
இந்தியா முழுவதும் 53 மிகப்பெரிய நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டும் 36.7 சதவிகிதம் பேர் தற்கொலை மூலம் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. பெங்களூர் நகரத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 30 சதவீதத்தினர் பிபிஓ, கால்சென்டரில் பணிபுரியம் ஊழியர்கள் என்றும் 45 சதவீதத்தினர் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
17 சதவீதத்தினர் குறைந்த வருமானம் உடையவர்கள். எனினும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் 19 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை எண்ணம் ஏற்படும் நொடியில் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மன உளைச்சல் காரணமாகத்தான் பெரும்பாலான தற்கொலைகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு சரியான நேரத்தில் ஆலோசனைகளை வழங்கினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் உயிரை பாதுகாக்க முடியும். எனவே இளைஞர்களிடையே தற்கொலை எண்ணம் ஏற்படுவதை தடுக்க கவுன்சிலிங் வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆலோசனை மையங்களை அழைக்க இலவச உதவி எண்களை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications