எங்களுக்கு தெரியும்.. நீங்க உங்க வேலையை பாருங்க...: இந்தியாவுக்கு சிங்கள அமைப்பு எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அல்லது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை என்று அந்நாட்டின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கையில் ஒரு கதையையும், இந்தியாவில் மற்றுமொரு கதையையும் கூறுகின்றார். மேனன் மட்டுமல்ல ஜெயலலிதாவின் ஆலோசனையும் எங்களுக்குத் தேவையில்லை. எமது நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு எங்களுக்குத் தெரியும்.
தமிழர்கள் வாழும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு இந்தியா ஏன் அவசரப்படுகின்றது? அமெரிக்கா ஏன் இந்த விடயத்தில்அதிக நாட்டம் காட்டுகின்றது? வடக்கில் முழுமையாக அமைதி ஏற்பட்ட பின்னரே அங்கு தேர்தலை நடத்தவேண்டும். வடக்கில் இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. அங்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் நீடிக்கிறது
இந்திராகாந்தி அம்மையார் அன்று ஆயுதங்களை வழங்கிப் புலிகளை வளர்த்துவிட்டதுபோல் இன்று அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்று பலமாக உள்ளது. உள்நாட்டிலும் புலிகளின் பலம் முழுதாகக் குன்றவில்லை. வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றார் அவர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications