சென்னை இறக்குமதி நிறுவனத்தில் சி்பிஐ ரெய்ட்: ரூ.130 கோடி மதிப்பு 400 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க இறக்குமதி நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க இறக்குமதி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய அரசின் உலோக வணிக கழகம் மூலம் அந்நிறுவனம் இறக்குமதி செய்த தங்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வில் தங்கம் இறக்குமதி செய்ததில் ரூ.18 கோடி ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊழலுக்கு சில அதிகாரிகளும் துணைபோனதும் தெரிய வந்தது.இதையடுத்து கடந்த மாதம் அந்நிறுவனம் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அந்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.130 கோடி மதிப்புள்ள 400 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இது தவிர கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications