ரக்ஷாபந்தன் நாளில் அண்ணனின் உயிரைக் காக்க சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி!
டெல்லி: சகோதரத்துவத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் நாளில் பெண்கள் தங்களின் உடன்பிறந்தவர்களின் கைகளில் ராக்கி கட்டி அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் புது டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரகம் செயலிழந்த தனது சகோதரனுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அன்பை நிரூபித்துள்ளார்.
புது தில்லியில் வசித்து வருபவர் ஆஷா (34). இவரது சகோதரர் ஸ்ரீநிவாஸ் டாகுர்(42). இவர் பரிதாபாத் நகரில் வசித்து வருகிறார். நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீநிவாஸ்க்கு சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டன. உடனடியாக சிறுநீராக மாற்று அறுவைச்சிகிக்சை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீநிவாசுக்கு சிகிச்சை அளித்த ஏய்ம்ஸ் ( AIMS) மருத்துவமனை மருத்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனது சகோதரனின் உயிரைக்காக்க தனது சிறுநீரகத்தில் ஒன்றை வழங்க முன்வந்தார் ஆஷா. இதனையடுத்து சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் நாளான செவ்வாய்க்கிழமை இந்த அறுவைச்சிகிச்சை நடைபெற்றது.
ரக்ஷாபந்தன் நாளில் சகோதரர்களின் கையில் ராக்கி கயிறு கட்டி அவர்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால் ஆஷா தனது சகோதரரின் உயிரைக்காக்க சிறுநீரகத்தை பரிசாக அளித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்ரீனிவாஸ்க்கு ஆபரேசன் முடிந்து நலமுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் 1.5 லட்சம் இந்தியர்கள் சிறுநீராக கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் உறுப்புகளை தானம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. 5000 சிறுநீரகங்கள் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கிடைக்கிறது. ஸ்பெயின் நாட்டில் ஒரு மில்லியனுக்கு 35.1 என்ற அளவில் உறுப்புகள் கிடைக்கின்றன. இங்கிலாந்தில் 27 சதவிகிதமும், அமெரிக்காவில் 26 சதவிகிதமும், கனடாவில் 14 சதவிகிதமும், ஆஸ்திரேலியாவில் 11 சதவிகிதமும் டோனர்கள் உள்ளனர். அதேசமயம் இந்தியாவில் 0.08 என்ற அளவிலேயே டோனர்கள் உள்ளனர் என்று சிறுநீரகவியல்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications