வதந்திகளை நம்ப வேண்டாம்... வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடகாவில் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது வடகிழக்கு மாநில மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
வங்கதேச ஊடுறுவலுக்கு பாஜக கண்டனம்
இந்த நிலையில் அஸ்ஸாம் வன்முறை குறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில்,
நாட்டின் சில இடங்களில் வடகிழக்கு மாநில மக்கள் தாக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. சட்டவிரோதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களால் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு தொடர்பும் உள்ளது.
இத்தகைய சக்திகளை ஒடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாமில் மதமோதலோ, இன மோதலோ இல்லை. இந்தியர்களுக்கும், சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினைதான்.
இதேபோன்று மும்பையில் நடந்த கலவரத்தில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தான் கொடியை வைத்திருந்ததுடன், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினர். தியாகிகள் நினைவிடத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்.
இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் ஆர்.அசோக், பெங்களூர் ரயில் நிலையம் சென்று, வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்றும், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இந்த வன்முறை சம்பவங்களை அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது. வடகிழக்கு மாநில மற்றும் அசாம் மக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை நடைபெறும் பா.ஜ.க. முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த வன்முறையின்போது ஊடகங்கள் மற்றும் பெண் போலீஸ் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications