திருப்பதி அரசு மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்- பதற்றம்
திருப்பதி : திருப்பதி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 11 குழந்தைகள் திடீரென மரணமடைந்ததால் பெற்றோர் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி ருயோ அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 11 குழந்தைகள் அடுத்தடுத்து திடீரென இறந்தன. இதனால் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்களுடன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சியினருடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த 11 குழந்தைகளே உயிரிழந்தது என்பது அரசு மருத்துவமனையின் கருத்து. ஆனால் அரசு மருத்துவமனையின் அலட்சியமே 11 குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாராணை நடத்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்த்தரவிட்டுளார்.












Click it and Unblock the Notifications