ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு -புதிய வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை ஆச்சார்யா நீடிப்பார்?

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் ஆச்சார்யா. இவர் திடீரென இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கர்நாடக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் மன உளைச்சல் காரணமாக இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனையா நியமனத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்திற்கு ஆச்சார்யாவும் வந்திருந்தார். தம்மை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க நீதிபதியிடம் அவர் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்ட நீதிபதி என்ன காரணத்துக்காக விலகுகிறீர்கள் என்று ஆச்சார்யாவிடம் கேள்வி எழுப்பினார். தமது தனிப்பட்ட காரணங்களால்தான் என்று ஆச்சார்யா பதிலளித்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லையா என்று மீண்டும் நீதிபதி கேள்வி எழுப்பியபோது அப்படியெல்லாம் இல்லை என்று ஆச்சார்யா கூறினார்.
இதைத் தொடர்ந்து அடுத்த சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படும்வரை வழக்கில் ஆஜராகுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார். இதை ஆச்சார்யாவும் ஏற்றுக் கொண்டார். இதனால் நாளை நடைபெற உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின் போது தனிநீதிமன்றத்தில் ஆச்சார்யா ஆஜராகக் கூடும் எனத் தெரிகிறது.
இதனிடையே நீதிபதி மல்லிகார்ஜூனையாவின் நியமனத்துக்கு எதிராக மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வரும் 28-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications