6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: கல்வித்துறை செயலாளராக டேவிதார்
சென்னை: தமிழக உயர் கல்வித்துறையின் சிறப்புச் செயலாளராக பி.டபிள்யூ.சி. டேவிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட உத்தரவில்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (சிவில் சப்ளை) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.டபிள்யூ.சி. டேவிதார் மாற்றப்பட்டு, உயர் கல்வித்துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், உயர் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் செயல்படுவார்.
சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (பணிகள்) ஆர்.அனந்தகுமார் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி மண்டல இணை கமிஷனராக (தெற்கு) நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பொதுத்துறை (மரபு சீர்முறை) துணை செயலாளர் டி.பி.ராஜேஷ் மாற்றப்பட்டு, பேரூராட்சிகளின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் பி.செந்தில்குமார் மாற்றப்பட்டு, பொதுத்துறை (மரபு சீர்முறை) துணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை முன்னாள் துணை செயலாளர் பிரஜேந்திரா நவ்நித், சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக (பணிகள்) நியமிக்கப்பட்டு உள்ளார். பேரூராட்சிகளின் இயக்குனர் எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications