கூடங்குளம் விவகாரத்தில் ஓவராக பேசிவந்த அமைச்சர் நாரயணசாமிக்கு சென்னை ஹைகோர்ட் செம டோஸ்

கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்திக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்ததை எதிர்த்தும் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் சுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நிலையில் கூடங்குளம் அணு உலை திறப்பு தேதியை மத்திய அமைச்சர் நாராயணசாமி எப்படி அறிவிக்கலாம்? உச்சநீதிமன்றத்தை மட்டும்தான் மத்திய அரசு மதிக்குமா? உயர்நீதிமன்றங்களை மதிக்க மாட்டாகளா? என்றும் சராமரியாக கேள்வி எழுப்பினர்.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எப்படி தடையில்லாத சான்றிதழ் கொடுத்தது? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications