நெரிசலை தவிர்க்க பெங்களூர்-சேலம், ஈரோடு, கோவை வழியே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

இது குறித்து சேலம் கோட்டம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேற்று முதல் வரும் அக்டோபர் 1ம் தேதி வரை வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரயில்கள், பெங்களூர்-கொச்சுவேலி இடையே சேலம், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படுகிறது.
கொச்சுவேலி-பெங்களூர் (வண்டி எண்.06316) சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு பெங்களூர் வந்தடையும்.
அதேபோல பெங்களூர்-கொச்சுவேலி மார்க்கத்தில் (வண்டி எண்.06315) சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும். இந்த ரயிலில் ஒரு இரு அடுக்கு ஏ.சி. பெட்டி, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 14 தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் பிரேக் வேன்கள் இருக்கும்.
இந்த ரயில் கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு மற்றும் சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications