மதிமுக மாநாடு: 1 லட்சம் பேருக்கு வைகோ செல்போனில் அழைப்பு

வரும் 15ம் தேதி கரூரில் மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு மகக்ளை வித்தியாசமான முறையில் அழைக்க மதிமுக முடிவு செய்தது. இந்த மாநாட்டிற்காக கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேருக்கு செல்போன் வழியாக அழைப்பு விடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்காக கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த செல்போன்களுக்கு தானாகவே அழைப்பு செல்கிறது. எடுத்துப் பேசினால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதிவு செய்யப்பட்ட பேச்சு கேட்கிறது. அந்த உரையில், வணக்கம் வைகோ பேசுகிறேன் என்பதில் தொடங்கி மாநாட்டிற்கு வாருங்கள் என அழைப்பது வரை 25 நொடிகள் அந்த உரையாடல் கேட்கிறது. இது தவிர மதிமுகவினர் 1000 பேர் இந்த உரையாடலை காலர் டியூனாக செட் செய்துள்ளனர்.
இவ்வாறு வித்தியாசமான முறையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த மாநாட்டால் பெரிய திருப்பம் ஏற்படும் என்று வைகோ நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications