கர்நாடகம் திடீர் முடிவு: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்!

காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் முதல்வர் ஷெட்டர் விளக்கினார்.
இதையடுத்து, ஆளுநரின் ஆலோசனையின்பேரில் மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதல்வர் ஷெட்டர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கர்நாடக அமைச்சர்கள், சட்ட நிபுணர்கள், சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலையை எடுத்துரைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை உள்ளதை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மறு ஆய்வு செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உடனடியாக மனு தாக்கல் செய்துள்ளோம். இதை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தற்போதைய தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் உண்மை நிலையைக் கண்டறிய இரு மாநிலங்களுக்கும் நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறும் அந்த மனுவில் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
ஆனால் ஆளுநரைச் சந்தித்தும் முடிவு மாறியது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக ஆளுநரை முதல்வர் ஷெட்டர் சந்தித்துப் பேசிய பின்னர், காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications