66 டாட் பால்கள்.. சேப்பாக்கம் மண்ணில் கொடுமை செய்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்.. குஜராத் அபாரம்!
சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் பவுலர்கள் மொத்தமாக 66 டாட் பால்களை வீசி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரபாடா 15 டாட் பால்களையும், சிராஜ் மற்றும் ஹோல்டர் இருவரும் தலா 14 டாட் பால்களை வீசியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப சரியான திட்டத்துடன் குஜராத் அணி களமிறங்கியது. சஞ்சு சாம்சனுக்கு அதிக வேகத்தில் பந்துவீசினால், விக்கெட்டை கைப்பற்றிவிடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் மூலமாக சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினர். அதே திட்டத்தை குஜராத் அணியும் பின்பற்றியது. இதன்பின் வந்த உர்வில் படேல், சர்ஃபராஸ் கான், டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆட வேண்டிய தேவை எழுந்தது.
ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்துக்கு ஒரு ரன்னை கூட எடுக்காமல், அதிக டாட் பால்களை விளையாடினார். அவருக்கு சிவம் துபே, கார்த்திக் சர்மா உள்ளிட்டோரும் கூட உறுதுணையாக நிற்கவில்லை. அதேபோல் ஆட்டத்தை 20 ஓவர்கள் வரை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.
கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசினார். மறுபுறம் ரபாடா 3 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் குஜராத் அணியின் பவுலர்கள் மொத்தமாக இந்தப் போட்டியில் 66 டாட் பால்களை வீசி இருக்கின்றனர். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக ரபாடா 15 டாட் பால்களையும், முகமது சிராஜ் மற்றும் ஹோல்டர் ஆகிய இருவரும் தலா 14 டாட் பால்களை வீசினர். அர்ஷத் கான் 13 டாட் பால்களையும், மானவ் சுதார் 9 டாட் பால்களையும், ரஷீத் கான் 1 டாட் பாலையும் வீசி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி மீண்டும் சேப்பாக்கத்தில் ஒரு காடு வளர்த்துவிட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications