பொது நுழைவுத் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்-இல்லாவிட்டால் போராட்டம் நடக்கும்: வைகோ
சென்னை: இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பொது நுழைவு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மத்திய அரசை கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் மத்திய அரசு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல், மருத்துவக் கல்வி, பல் மருத்துவக் கல்வி படிப்புக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்த போவதாக அறிவித்துள்ளது.
சமூகநீதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு உயர்நீதிமன்றமும், தமிழக அரசின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பும் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. நகர்ப்புற மற்றும் மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே மருத்துவ பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம் குறிப்பிட்ட சதவீதம் இடங்கள் மருத்துவ கல்லூரிகளில் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது சமூக நீதியின் அடிப்படையையே தகர்த்துவிடும்.
தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கல்வித் துறையில் மத்திய அரசின் தாந்தோன்றித்தனமான போக்கையே காட்டுகிறது.
மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த கல்வித் துறையை பறித்துக் கொண்டு, மத்திய அரசு தமது விருப்பம் போல் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிடில், மத்திய அரசை எதிர்த்து மதிமுக போராட்டம் நடத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications