ஈ.வி.பி தீம்பார்க் விபத்து: ஐவர் கைது - உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை: சென்னை அருகே உள்ள ஈ.வி.பி தீம் பார்க்கில் ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அதன் உரிமையாளர் பெருமாள் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஈவிபி வேர்ல்டில் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்ற அபியா மேக் என்ற பெண் உள்ள ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அவர், கிங்பிஷர் விமான நிலையத்தில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். விடுமுறை தினத்தை கழிக்க தனது 12 நண்பர்களுடன் செவ்வாய்கிழமை ஈவிபி வேர்ல்டுக்கு வந்தார்.
ராட்டினத்தில் ஏறி சுற்றும் போது ஏற்பட்ட விபத்தில் அபியா மேக் பலியானார். இதனைத் தொடர்ந்து, நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராட்டின ஆப்பரேட்டர் வில்லியம்ஸ், உதவியாளர் அசோக், பூங்கா பொறுப்பு மேலாளர் ரகு உட்பட 3 பேரை உடனடியாக கைது செய்தனர். ராட்டினத்தை இயக்கவும் தடை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பூங்கா உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications