காஷ்மீர்.. ஐ.நா. சபையில் பாகிஸ்தான் சில்மிஷம்.. இந்தியா பதிலடி!
நியூயார்க்: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, எனவே இதனை ஐ.நா சபையில் பிரச்சனையாக எழுப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்தது.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த வாரம் ஐ.நா. சபையில் பேசினார். அப்போது அவர், காஷ்மீர் என்பது ஐ.நா. அமைப்பின் தோல்வியின் அடையாளம் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவே சர்தாரியின் கருத்தினை நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.
இந் நிலையில், நேற்று ஐ.நாவின் சிறப்பு அரசியல் குழுவின் கூட்டத்தில் பாகிஸ்தானின் நிரந்தர துணை பிரதிநிதியான ராஜா பஷீர் தரார் பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல், ஐ.நா. சபையின் காலனிமய எதிர்ப்பு திட்டம் நிறைவடையாது என்றார். இந்தப் பிரச்சனைக்கு காஷ்மீர் மக்கள் உள்பட அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு அமைதியான தீர்வைக் காண பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது என்றார்.
அவரின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசிய இந்திய தூதர் நாம்கியா காம்பா, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் இங்கு எழுப்பியுள்ளது வருந்தத்தக்கது.
பாகிஸ்தான் பிரதிநிதியின் இந்தக் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். காஷ்மீர் குறித்து அவர் கூறியவை இந்தக் குழுவின் பணிக்கு தொடர்பு இல்லாதவை. இந்திய அரசியல் சாசனம், தனது குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குகிறது என்றார்.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி:
இவரின் கருத்தை மறுத்த பாகிஸ்தானின் பஷீர் தரார், ஐ.நா. குழுவின் பணிக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பற்றது என்று இந்திய பிரதிநிதி கூறுவது சரியல்ல என்றார். மேலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த இந்தியத் தூதர் காம்பா, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. என்று ஆணித்தரமாக தெரிவித்தார். பாகிஸ்தான் இந்த விவகாரத்தை இங்கு எழுப்புவதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் கூறினார்.
இதையடுத்து அந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பற்றிய விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications