சில்லறை வர்த்தகம்... ஏற்றிக் கட்டிய வேட்டியுடன் டி.ராஜேந்தர் வீராவேச போராட்டம்!

வேட்டியை ஏற்றிக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் வீராவேசமாகப் பேசினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரேநடந்த போராட்டத்தின்போது ராஜேந்தர் பேசுகையில், அன்று வெள்ளைக்காரனைத் துரத்தி சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் வேறு. இன்று சோனியா தலைமையில் உள்ள காங்கிரஸ் வேறு.
நீங்க அளித்தீங்க அனுமதி அந்நிய முதலீடு. தொழிலாளர்கள் ஏந்த வேண்டும் திருவோடு. கடைசியில் அவர்கள் ஓட வேண்டும் தெருவோடு.
கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தையே மதிக்கவில்லை என்றால் எந்த நீதிமன்றத்தை மதிக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பையே எதிர்த்து காவிரி தண்ணீருக்கு கர்நாடகா போடுகிறது தடை. இதற்கு தமிழக அரசு எங்கே காணும் விடை.
ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகிறார் தண்ணீர் தரக்கூடாது என்று இது நியாயமா.கர்நாடகத்திற்கு தமிழத்திலிருந்து மின்சாரம் மட்டும் வேண்டும். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் தரமாட்டாங்களாம்.
மின்சார தட்டுப்பாடு ஏன் வருகிறது. வீட்டுக்கு வீடு டிவி, மிக்ஸி, கிரைண்டர். பிறகு எப்படி மின்சார பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். சம்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் வாழமாட்டான். இதுதான் இன்றைய நிலை.
ஆகவே மத்திய அரசு காவிரி பிரச்சனையிலும், மின்வெட்டு பிரச்சனையிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் என்றார் ராஜேந்தர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications