நில மோசடி புகார்: முன்னாள் ஏடிஜிபி துக்கையாண்டி வீட்டில் போலீஸ் ரெய்ட்

Subscribe to Oneindia Tamil

Thukkaiyandi
சென்னை: நில மோசடி புகாரில் சிக்கியிருக்கு முன்னாள் ஏடிஜிபி துக்கையாண்டி வீட்டில் சென்னை போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

துக்கையாண்டியின் மனைவி மற்று மகள் மீது நில அபகரிப்பு புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் இன்று காலை முதல் துக்கையாண்டியின் வீட்டில் சென்னை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் துக்கையாண்டியின் மனைவி தொடர்புடைய நில மோசடி புகார் தொடர்பாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நில மோசடியின் பின்னணி

மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா மற்றும் சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள் மீதான புகார்கள். இந்த வழக்கினால் ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் திடீரென துக்கையாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+