நாளை கூடங்குளத்தாரின் கோட்டை முற்றுகைப் போராட்டம்.. உஷாராகிறது போலீஸ்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், அணு உலையில் யுரேனியம் நிரப்பக் கூடாது என்பதை வலியுறுத்தியும் போராட்டக் குழுவினர் 29ம் தேதி சட்டசபையின் வைர விழாக் கூட்டம் நடக்கும் நாளில், தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
இதற்கு, மதிமுக, பாமக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி, பழ.நெடுமாறனின் உலகத் தமிழர் பேரவை, திராவிட விடுதலைக் கழகம், தமிழர் தேசியக் கட்சி, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையடுத்து சென்னை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தலைமைச் செயலகம் செல்லும் சாலையை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு விடிய விடிய தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போராட்ட குழுவினர் பல நாட்களுக்கு முன்னதாகவே சென்னைக்குள் வந்து உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், பஸ்களையும் போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை நகர் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் பகுதியில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடி நின்றால் அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ராமானுஜம் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள போலீஸாருடன், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை, அதிவிரைவுப் படை, கமாண்டோ படை, கலவரத்தை ஒடுக்கும் சிறப்பு போலீசார் என்று கூடுதலாக வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டம் நடந்து விடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாமல் தவிர்ப்பதிலும் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications