பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி-இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு
சேலம்: அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சார்வாய் கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் கலந்து கொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழக அரசு மற்ற மாநிலங்களை போல மத்திய அரசுடன் சுமூகமான உறவை வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையால், தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சனை குறித்து ஆலோசிக்கும் போது, கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து கட்சிகளை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும். மக்களுக்கு நன்மை செய்கின்ற, மாணவ சக்திக்கு நல்வழி காட்டுகின்ற இந்திய ஜனநாயக கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications