தீபாவளியன்று திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து அக்கோவிலின் இணை ஆணையர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கந்த சஷ்டி தொடங்கும் முதல் நாளான நவம்பர் 13ம் தேதி மற்றும் சூரசம்ஹாரம் நடக்கும் 18ம் தேதி ஆகிய இரு தினங்களில் திருக்கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும்.
அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு அருள்மிகு ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாரதனையும் நடைபெறும்.
சூரசம்ஹாரம் அன்று மாலை 4.20 மணியளவில் சுவாமி எழுந்தருளி மாலை 5.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவின் 2ம் நாள் முதல் 5ம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
நவம்பர் 19ம் தேதி அன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் வைத்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications