சர்ச்சைக்குரிய தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் சென்னைக்கு திடீர் மாற்றம்

தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து பல்வேறு பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவற்றை சரிவர கையாளவில்லை ராஜேஷ் தாஸ் என்ற புகார் இருந்து வந்தது.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரப் பிரச்சினை மற்றும் கூடங்குளம் பிரச்சினை. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் அவர் அடக்குமுறையைக் கையாண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தேனி மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து கேரளாவுக்கு எதிராக போராடியபோது அதை ஒடுக்கியவர் ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசினார் என்றும் சர்ச்சை எழுந்தது. அப்போதே ராஜேஷ் தாஸை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அதேபோல கூடங்குளம் போராட்ட விவகாரத்திலும் ராஜேஷ் தாஸின் அணுகுமுறை கடும் அதிருப்தியை அரசுக்குப் பெற்றுக் கொடுத்தது.
அதை விட உச்சமாக கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது போலீஸார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தலித் மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதுவும் ராஜேஷ் தாஸின் அணுகுமுறைத் தவறை அம்பலப்படுத்தியது.
அதேபோல சமீபத்தில் நடந்த தேவர் குருபூஜை சமயத்தில் நடந்த பயங்கர மோதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோல 6 தேவர் சமுதாயத்தினர் கொல்லப்பட்டதால் ராஜேஷ் தாஸின் பெயர் மேலும் கெட்டுப் போனது.
பரமக்குடி கலவரம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு என ராஜேஷ் தாஸ் சர்ச்சையில் சிக்கியபோதெல்லாம் மாற்றாத அரசு, தற்போது அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான தேவர் சமுதாயத்தினரிடையே கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து தூக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், ஐ.ஜி.ராஜேஸ்தாஸ் அப்பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் உள்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர காவல்துறையின் குற்றவியல் பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த அபய்குமார் சிங், தென்மண்டல ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை டூ சென்னை
இதுதவிர சென்னை மாநகர போலீஸ் தலைமையகத்தில் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய சுனில்குமார் சிங்,நெல்லை போலீஷ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கருணாசாகர், சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா,சென்னை மாநகர காவல்துறை தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications