ஆளுக்கு 74 நாள் மீன் பிடிக்கலாமே... தமிழக, இலங்கை மீனவர்களுக்கு யுவராஜா யோசனை!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழக, இலங்கை மீனவர்கள் ஆண்டில் ஆளுக்கு 74 நாட்கள் மீன் பிடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா.

ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார் யுவராஜா.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக - இலங்கை கடற் பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்கள்தான் மீன்பிடிக்க முடிகிறது. எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, ஆளுக்கு 74 நாட்கள் கடலில் மீன்பிடிக்க இறங்கினால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை இல்லாமல் மீன் பிடிக்கலாம்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க ராகுல் காந்தியின் உதவியை நாடுவோம். ராகுல் காந்தி உதவியுடன் அத்தனை பேரையும் மீட்டு விடுவோம் என்றார் யுவராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+