விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம்: 3 ராணுவ வீரர்கள் பதவி பறிப்பு?
டெல்லி: இந்திய திருமணச் சட்டத்தை மீறி இரண்டாவது திருமணம் செய்த 3 ராணுவ வீரர்களை, பணி நீக்கம் செய்ய இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
இந்திய திருமணச் சட்டப்படி முதல் மனைவியிடம் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்வது குற்றமாகும். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இதேபோல் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், திருமண சட்டத்தை மீறிய 3 ராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயர் பதவியிலும், மற்ற இருவர், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டோ அல்லது முதல் மனைவியின் சம்மதத்துடனோ இரண்டாவது திருமணம் செய்பவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications