சட்டசபை வைர விழா: எக்கச்சக்க கெடுபிடி- 30 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி சீட்டு
சென்னை: சட்டசபை வைர விழாவுக்கு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 30 பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் வைர விழா வரும் 30ம் தேதி பேரவை மண்டபத்தில் ஆளுநர் ரோசைய்யா தலைமையில் நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கும் விழா அழைப்பிதழ் மற்றும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. பேரவை மண்டபத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே நபர்கள் அமர முடியும் என்பதால் அனுமதிச் சீட்டு வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில்,
வைர விழாவுக்கு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 30 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும் தான் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களையொட்டி தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வரும் 29ம் தேதி பிற்பகல் முதல் 30ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.
பத்து மாடிகள் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் முதல்வர் தேநீர் விருந்து அளிக்கிறார். விழாவுக்கு வருவோர் வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்குள் பேரவை மண்டபத்திற்கு வந்து இருக்கைகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கேமரா மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. இது தவிர பேரவை மண்டபம் மற்றும் அதையொட்டி இருக்கும் தாழ்வாரங்களில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications