பஸ்ல.. செக்ஷுவல் ஹராஸ்மென்ட்டா... தடுக்க என்ன செய்யனும்..: சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.
- அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் சாதாரண் உடையில் பெண் போலீசார் நிறுத்தப்பட வேண்டும்.
- முக்கியமான இடங்களில் சிசிடிவி காமிராக்களை பொருத்த வேண்டும்.
- பொது இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்படும் நபர், பாலியல் தொல்லைகளைத் தடுக்கக் கூடிய வலுவுடன் இருக்க வேண்டும்.
- பேருந்து உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அதன் ஓட்டுநர் உடனடியாக அருகே உள்ள காவல்நிலையத்துக்கு செல்ல வேண்டும். அப்படி செய்ய தவறினால் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications