பிடிவாரண்ட் எச்சரிக்கையை தொடர்ந்து பெங்களூர் கோர்ட்டில் சசி ஆஜர்-ஆவணம் கோரிய மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீண்டநாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பலமுறை வாய்தாக்கள், ஒத்திவைப்புகள் நடந்துள்ளன.
நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த புதிய நீதிபதி பாலகிருஷ்ணா சசிகலா, இன்றைய வழக்கு விசாரணைக்கு சசிகலா ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நாளை சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிபிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறினார். இதேபோல் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கைது நடவடிக்கைக்கு பயந்து போன சசிகலா வேறு வழியின்றி புதிய நீதிபதி பாலகிருஷ்ணா முன் முதல் முறையாக இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
நேற்றைய விசாரணையின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இம் மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் வரும் 19ம் தேதிமுதல் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஜெயலலிதா 1,333 கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். சசிகலாவிடம் இதுவரை 632 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 300க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட வேண்டியது உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications