'மோடி ஒரு பொய் விளம்பரம் செய்யும் வியாபாரி': குஜாராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் தாக்கு

குஜராத் மாநில சட்டசபைக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைந்திருக்கிறது. இன்று 3 இடங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஜாம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகையில், குஜாரத் முன்னேறியிருப்பதாக ஒரு வியாபாரியைப் போல் பொய்யாக விளம்பரம் செய்கிறார் மோடி. இந்த ஜாம்நகரில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தண்ணீர் கிடைக்கிறது? 3 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் 25 நிமிடம்தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் மோடி சொல்கிறார் குஜராத் ஒளிர்கிறது என்று.
இந்த மாநிலத்தில் சுமார் 10 லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். ஆனால் மாநிலம் பிரகாசிக்கிறது என்கிறார் வியாபாரி மோடி. குஜராத் மாநிலத்தின் சட்டசபைக் கூட்டம் ஒரு ஆண்டுக்கு மொத்தமே 25 நாட்கள்தான் கூடுகிறது. இப்படிக் கூட்டினால் மக்களின் பிரச்சனைகள் எப்படி அரசுக்கு தெரியவரும்?. அந்த 25 நாட்கள் கூட்டத்திலும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிடுகிறார் மோடி குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 14,000 ஆர்.டி.ஐ. மனுக்களுக்குப் பதில் தராமல் இருக்கிறது மோடி அரசு.
காந்தியின் கொள்கைகள் என்பது குஜராத் மக்களின் கொள்கைகள். நான் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுகிறவன். குஜராத் அரசும், மோடியும் தங்களது கனவை நனவாக்கிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். மக்களின் கனவை நனவாக்க பாடுபடவில்லை. ஒரு நல்ல தலைவர் என்பவர் மக்களது கனவை நனவாக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications