மயிலை மாங்கொல்லையில் அதிமுக நாஞ்சில் சம்பத் நாளை 'கன்னிப் பேச்சு'!

சமீபத்தில்தான் மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார் நாஞ்சில் சம்பத். வந்த வேகத்தி்ல் அவருக்கு அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியைக் கொடுத்து குளிர்வித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து நாளை முதல் கூட்டத்தில் பேசவுள்ளார் சம்பத். அதிமுக இலக்கிய அணி சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் ஒரு துக்கூட்டம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், அமைச்சருமான பா.வளர்மதி தலைமைதாங்குகிறார். இதில் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றுகிறார். சென்னை மையர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நல்ல பாடி லாங்குவேஜுடன் பேசுவார் என்பதாலும்,பேசும்போது இலக்கியம், சொல், சுவை, பொருள் என பல அம்சங்களுடன் ஆடி ஆடி பேசுவார் என்பதாலும் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும், அதிமுகவினர் மாங்கொல்லைப் பக்கம் நாளை திரள இன்று முதலே யாராகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications