நோ பார்க்கிங் பகுதியில் நின்ற கேரள முதல்வர் மனைவியின் காருக்கு ரூ.100 அபராதம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் மனைவி மரியாவின் காருக்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ரூ.100 அபராதம் விதித்தார். அந்த பணத்தை உடனடியாக செலுத்துமாறு முதல்வர் தனது டிரைவரை கேட்டுக் கொண்டார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் மனைவி மரியா உம்மன். நேற்று முன்தினம் அவர் கார் டிரைவரை கடையில் சில பொருட்கள் வாங்க அனுப்பியிருந்தார். இதையடுத்து டிரைவர் காரை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு பகுதிக்கு சென்றார். டிரைவர் காரை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க கடைக்குள் சென்றுள்ளார். இதை கவனித்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அந்த காருக்கு அபராதம் வசூலிக்க ஸ்டிக்கரை ஒட்டினார். டிரைவரோ இது முதல்வர் உம்மன் சாண்டி மனைவின் கார் என்று கூறியுள்ளார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ அது யார் காராக இருந்தாலும் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து காரை எடுத்துச் சென்ற டிரைவர் இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டியிடம் கூறினார். கார் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து டிரைவர் திருவனந்தபுரம் பட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சென்று ரூ.100 அபராதம் செலுத்தினார்.












Click it and Unblock the Notifications