பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு அரசு வேலை- உ.பி. முதல்வர் அகிலேஷ்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்ணின் சிகிச்சைச் செலவுகளை உ.பி.அரசே ஏற்கும் என்றும், அப்பெண்ணுக்கு அரசு வேலை தரப்படும் என்றும் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் பெரும் கொடுமையானது, கடும் கண்டனத்துக்குரியது. தவறு செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அனைவரும் நிற்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைச் செலவுகள் முழுவதையும் உ.பி. அரசே ஏற்கும். மேலும் அப்பெண்ணுக்கு வேலையும் வழங்கப்படும். மேலும் அவருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும் என்றார் அகிலேஷ் யாதவ்.












Click it and Unblock the Notifications