உ.பி,யில் 9 அமைச்சர்கள் மீது கற்பழிப்பு வழக்குகள்! 48 பேரில் 26 அமைச்சர்கள் கிரிமினல்கள்!!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்று அறைகூவல் விட்டு முதல்வர் பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 54% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாம்!
இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான்! உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் -ஒழுங்கு என்பது பொதுவாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. சில தாதாக்கள் வசம்தான் இருக்கும். ஆனால் தற்போது அந்த தாதாக்களே அமைச்சர்களாகவும் வலம் வருவதால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டியதில்லை.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்தபோது ஆவணங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் 48 கேபினட் அமைச்சர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கற்பழிப்பு வழக்கில் 9 அமைச்சர்கள்!
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் நிறுவனர் திரிலோசன் சாஸ்திரி மற்றும் புதிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் சிங் ஆகியோர் தெரிவித்த தகவல்களின்படி உத்தரப்பிரதேசத்தின் 9 அமைச்சர்கள் மீது கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, கடத்தல் போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

அதிக 'கேஸ்' வாங்கிய அமைச்சர்
உ.பியின் அமைச்சர் மெகபூப் அலி மீது அதிகபட்சமாக 15 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இவர் அம்ரோ தொகுதி எம்.எல்.ஏ. கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர் மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கிரிமினல் ராஜபையா
இதேபோல் உணவுத்துறை அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங் எற ராஜ பையா, நாடறிந்த குற்றவாளி. இவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முன்பு உ.பி.யில் முதல்வராக முலாயம்சிங் இருந்த காலத்தில் ராஜபையாவின் கொடி அப்படி ஒரு ரத்த வெள்ளத்தில் மிதந்தது! மற்றொரு அமைச்சர் அர்விந்த் சிங் மீது 3 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மனோஜ்குமார் சிங் என்ற அமைச்சர் தம் மீது கற்பழிப்பு வழக்கு பதிவாகி இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்திருக்கிறார்.

குரோர்பதி அமைச்சர்கள்!
மேலும் 48 அமைச்சர்களில் 38 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வேளாண் அமைச்சர் குவார் ஆனந்த் சிங்தான் இவர்களில் டாப் 1. இவரது சொத்து மதிப்பு மொத்தம் ரூ 18.3 கோடி! அடுத்த இடம் போக்குவரத்து அமைச்சர் ராஜா மகேந்திர அரித்மன்சிங்கின் சொத்து மதிப்பு ரூ14.79 கோடி! முதல்வர் அகிலேஷ் யாதவின் சொத்து மதிப்பு ரூ4.85 கோடி! அவரது உறவினரான சிவ்பால் சிங்கின் சொத்து மதிப்பு ரூ6 கோடி! உ.பி. அமைச்சர்களில் பல்ராம் யாதவ்-ன் சொத்து மதிப்பு வெறும் ரூ16.31 லட்சம்! இவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications