பர்மா: விமானத்தில் திடீரென தீ- அவசர தரையிறக்கம் - 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ரங்கூன்: பர்மா தலைநகர் ரங்கூனில் இருந்து ஹெஹோ நகர் நோக்கி சென்ற தனியார் விமானத்தில் திடீரென தீ பிடித்ததால் அவசர தரை இறங்கியது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரங்கூனில் இருந்து ஹெஹோ நகர் நோக்கி 60 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்து. அப்போது விமான நிலையத்தை அடைய சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அவசரமாக அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
தரையை நோக்கி விமானம் சீறிப்பாய்ந்த நிலையில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார். விமானம் தரையிறங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 11 வயது குழந்தை உயிரிழந்தது. 2 விமானிகள், 4 வெளிநாட்டு பயணிகள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications