டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதுபானங்கள் மாயம்: விடிய விடிய தொடரும் விசாரணை
நெல்லை: ராதாபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மாயமாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு குருசாமி என்பவர் சூபர்வைசராக உள்ளார். இந்த கடையில் தினமும் சுமார் ரூ.50,000 வரை மதுபானங்கள் விற்பனை ஆவது வழக்கம். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடிந்தகரை, கூத்தங்குழியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் சமூகரெங்கபுரம் டாஸ்மாக் கடையில் தினசரி விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்தது.
சிலர் இந்த கடையில் இருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கிச் சென்று இடிந்தகரை, கூத்தக்குழியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதனையடுத்து வள்ளியூர், ராதாபுரம் போலீசார் சோதனை நடத்தியபோது மதுபானம் கடத்திய சிலர் பிடிப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. சமூகரெங்கபுரம் கடையில் அதிக மது விற்பனையாவதால் மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து அதிக சரக்கு கேட்டு ஊழியர்கள் டிமாண்ட் செய்தனர். இருப்பினும் விற்பனைக்குரிய பணத்தை சரிவர செலுத்தாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த டாஸ்மாக் அதிகாரிகள் சமூகரெங்கபுரம் கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 86 ஆயித்திற்கான மதுபானங்கள் இருப்பு குறைந்தது. மேலும் இதன் விற்பனை பணமும் இல்லை. இதையடுத்து கடை சூபர்வைசரிடம் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் மொத்தமாக மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பிறகு அதிக பணம் வாங்கினாராஎன்பது போன்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. இருப்பு குறைவான பணத்தை சூபர்வைசர் செலுத்தாத பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications