திருவண்ணாமலை கோர்ட்டிலும் விஜயகாந்த்துக்கு எதிராக வழக்கு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி திருவண்ணாமலையில் தேமுதிக நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துஅவர் பேசினார்.
இதுதொடர்பாக தற்போது திருவண்ணாமலை கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் அன்பழகன் ஒரு அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குக்கான முகாந்திரம் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆராய்ந்த பின்னர் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
ஏற்கனவே சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் விஜயகாந்த் மீது அரசு வழக்கறிஞர்கள் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இதில் சில வழக்குகளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். இந்தநிலையில் தற்போது புதிததாக திருவண்ணாமலையில் விஜயகாந்த்துக்கு எதிராக வழக்குப் பாய்ந்துள்ளது.