தர்மபுரி கோர்ட்டில் விஜயகாந்த் நேரில் ஆஜராக தேவையில்லை- உயர்நீதிமன்றம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது தொடர்பாக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் தர்மபுரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
தர்மபுரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தேமுதிக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு அரசாணையையும் பிறப்பித்தது.
இதற்குத் தடை கோரியும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியும் விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதி கே. வெங்கட்ராமன் விசாரித்தார். பின்னர், அவதூறு வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து உத்தரவிட்ட நீதிபதி, அரசாணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications