'சமரசமற்ற சமரே... தஞ்சை மகிழ்கிறது இப்போது... தமிழகம் மகிழ்வது எப்போது?: கலக்கிய "எம்.என்" பேனர்கள்!

எம்.நடராஜன் தமது தந்தை மருதப்பா அறக்கட்டளை மூலம் தஞ்சாவூரில் ஆண்டுதோறும் கலை இலக்கிய நிகழ்வாக பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ஜெயலலிதா அரசால் 90 நாள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு திரும்பியிருப்பதால் சீறிய சிங்கமாக இந்தக் கூட்டத்தில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதற்கேற்ப பேனர்களும் தஞ்சையை கலக்கியிருந்தன.
வழக்கம் போல இந்த ஆண்டும் நிகழ்ச்சிக்கு ஈழக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் இலங்கை இனப்பிரச்சனையும் எட்டிப்பார்த்தது. பின்னர் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா நடராஜன் பேச வந்தார்.
அப்போது, "நான் நல்லது செய்தால், எழுத மாட்டார்கள். நான் வாய் தவறி ஏதாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால், அதையே நான்கு நாட்களுக்கு 24 மணி நேரமும் போடுவார்கள். நான் எதுவும் தீனி போடுவேனா, மாட்டேனா என்று காதைத் தீட்டி வைத்திருக்கிறார்கள்'' என்று காட்டத்துடன் தொடங்கி கருணாநிதி, சிதம்பரம் அனைவரையும் ஒருபிடிபிடித்தார். சரி ஜெயலலிதாவை எப்படியும் விமர்சிப்பார்தானே என்று எதிர்பார்த்தோருக்கு 'அல்வா' கொடுக்கும் வகையில் நானும் புரட்சித் தலைவியும் காவிரி நீர் கோரி ராஜீவிடம் மனு கொடுத்தோம் என்று பேச ‘சப்'பென்று ஆகிவிட்டது கூடியிருந்தோருக்கு!
பின்னர் என்ன நினைத்தாரோ திடீரென, 'என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்கிறேன். தேர்தல் வரும்போது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறேன்" என்று மறைமுகமாக பொடி வைத்து பேசிய கையோடு எஸ்கேப்பாகிவிட்டார் எம்.என்.!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications