வடகொரியாவில் கடும் பஞ்சம்: பெற்றோரே பிள்ளைகளை கொன்று, அவித்து தின்னும் அவலம்
பாரியா: வட கொரியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாரியா மாநிலத்தில் பசிக் கொடுமை தாங்க முடியாமல் பெற்றோரே குழந்தைகளை சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.
வட கொரியாவில் உள்ள பாரியா மாநிலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது தவிர வடக்கும் மற்றும் தெற்கு ஹ்வாங்ஹே மாகாணங்களிலும் மக்கள் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு பசிக் கொடுமை தாங்க முடியாமல் இதுவரை 10,000 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் பசியைப் போக்க உணவு இல்லாததால் மனிதர்கள் சக மனிதர்களை கொன்று தின்னும் அவலம் அதிகரித்துள்ளது.
இப்படி மக்கள் உணவில்லாமல் இறந்து கொண்டிருக்கையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்(30) இரண்டு ஏவுகணைகளை விண்ணில் செலுத்த பெரும் தொகையை செலவு செய்துள்ளார். ஒரு பத்திரிக்கையாளர் கூறுகையில், ஒரு மனிதர் பசியால் புதைக்கப்பட்ட தனது பேரக்குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து சாப்பிட்டார். இன்னொருவரோ தனது குழந்தையை வேக வைத்து சாப்பிட்டார் என்றார்.
பஞ்ச கொடுமை குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் கூறுகையில்,
எங்கள் கிராமத்தில் கடந்த மே மாதம் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று சாப்பிட முயன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் முதலில் தனது மகளைக் கொன்றுள்ளார், அதை மகன் பார்த்தால் அவனையும் கொன்றுள்ளார். மனைவி வீடு திரும்பியதும் இன்று சாப்பிட நமக்கு கறி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மனைவி இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து வெட்டி எடுத்தது போக மீதமுள்ள உடல்களைக் கண்டுபிடித்தனர்.
சோங்டான் கவுன்ட்டியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் நபர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் தனது குழந்தையையே வேக வைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
1990களில் வட கொரியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு 240,000 முதல் 3.5 மில்லியன் பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications