பிரதமர் வீட்டை முற்றுகையிட மதிமுகவினர் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்னையில் இருந்து மதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் டெல்லிக்கு பயணமாகியுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
ரயிலில் செல்லும் போராட்டக்காரர்கள் நாளை மாலை டெல்லியை அடைகின்றனர். டெல்லியில் பிரதமர் இல்லத்தையும், ராஜபக்சே வருகை தர உள்ள திருப்பதியிலும் மதிமுகவினர் வரும் 8ம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.













Click it and Unblock the Notifications