விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் கொள்முதல்- 'இத்தாலி' நிறுவனங்களின் தலைவர்கள் கைது!

இத்தாலியைச் சேர்ந்த பின்மெக்கானிகா நிறுவனம் அந்நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இதன் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட். இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து பாதுகாப்பு தளவாட ஆர்டர்களைப் பெற்று தயாரித்து தருவது இதன் பணி. இந்நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30% பங்குகள் உண்டு.
இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக விமானப் படையில் MI-8 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றுக்குப் பதிலாக புதிய ஹெலிகாப்டர்களை வாங்க 2010-ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஆர்டரைப் பெறுவதில் தீவிரம் காட்டியது இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இந்தியாவைச் சேர்ந்த பிரிகேடியர் ஒருவரும் இந்நிறுவனத்தின் தரகரை அணுகிப் பேசியிருக்கிறார். ஒரு வழியாக பேரம் முடிவடைந்து ரூ. 3,546 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றது இத்தாலிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட்.
இந்தியாவின் இந்த ஆர்டரை இத்தாலியின் பின்மெக்கானிகாவும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டும் லஞ்சம் கொடுத்துப் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலிய அரசாங்கம் முதலில் விசாரணை நடத்தியது. பின்னர் இந்தியாவிலும் இந்த ஊழல் வெடிக்கவே வேறு வழியின்றி மத்திய அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் ஊழல் நடந்தது உறுதியானால் இந்த ஆர்டரையும் ரத்து செய்வோம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டரைப் பெற பின்மெக்கானிகா மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்திருப்பது உறுதியானதால் இவற்றின் தலைமை அதிகாரிகளை இத்தாலி அரசு கைது செய்திருக்கிறது.
இதன்படி கிஸ்பி ஓர்சி கைது செய்யப்பட்டுள்ளார். பர்னோ ஸ்பங்னோலினியை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுவிஸ் நாட்டில் பதுங்கியிருக்கும் 2 தரகர்களை நாடு கடத்த கோரவும் இத்தாலி அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த ஊழலில் ரூ. 470 கோடி வரை இந்தியாவில் லஞ்சம் கைமாறியிருப்பதாகத் தெரிகிறது. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ?
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications