நாகாலாந்து அமைச்சர் காரில் சிக்கிய ரூ. 1 கோடி பணம், கூடவே சில ஆயுதங்களும்-கைது!
Subscribe to Oneindia Tamil

வோகா மாவட்டத்திற்கு அருகே வைத்து காரை சோதனையிட்ட அதிகாரிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இம்சென், தனது கொரிடங்கா தொகுதிக்குக் காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அஸ்ஸாம் ரைபிள் படையினர் சோதனைச் சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அமைச்சரின் காரையும் அவர்கள் சோதனையிட்டனர். அப்போதுதான் பணமும், ஆயுதமும் சிக்கியது. கூடவே மது பாட்டில்களும் இருந்தன.
இதையடுத்து அமைச்சரை மேற்கொண்டு போக விடாமல் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர். போலீஸார் அமைச்ரைக் கைது செய்தனர்.
நாகாலாந்து தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்தப் பணத்தை அமைச்சர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications