நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெறித்தும், 3 குழந்தைகள் தலையில் அம்மிக்கல்லைப் போட்டும் கொலை

Subscribe to Oneindia Tamil

Man kills wife and 3 kids
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.

திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் வடக்கு பரதர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மனைவி ராமலக்ஷ்மி. அவர்களுக்கு ப்யூலா, ஜெயசீலா என்ற 2 மகள்களும், ஆபிரகாம் என்ற மகனும் உள்ளனர்.

பாஸ்கருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் தூங்கிவிட்டனர். ஆனால் பாஸ்கருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் அவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார். அப்போது அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு 3 குழந்தைகளும் விழித்தார்கள். உடனே அவர் அம்மிக்கல்லை தூக்கி குழந்தைகளின் தலையில் போட்டு அவர்களையும் கொலை செய்தார்.

இதையடுத்து இன்று காலை குரும்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+