எங்கள் ஆளை விடுவிக்கலை என்றால் முகேஷ் அம்பானியை தாக்குவோம்: இந்தியன் முஜாஹிதீன் மிரட்டல் கடிதம்

கடந்த 24ம் தேதி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் அங்குள்ள ஊழியரிடம் ஒரு கவரை அளித்துவிட்டு சென்றார். அதைப் பிரித்து படித்துப் பார்த்தபோது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது.
முகேஷ் குஜராத் முதல்வர் மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரை தாக்கப் போவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது 27 அடுக்குமாடி வீடான ஆன்டில்லாவையும் தாக்கப் போவதாக மிரட்டியுள்ளனர். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தன் கையால் எழுதி அனுப்பிய கடிதத்தில் தங்கள் கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்யாவிட்டால் முகேஷ் அம்பானிக்கு தான் கேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடித விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டேனிஷ் பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த முகமது டேனிஷ் அன்சாரி ஆகும். பட்கலின் சகோதரர்கள் பாகிஸ்தான் தப்பிச் செல்லும் முன்பு தனது வீட்டில் அடைக்களம் கொடுத்ததற்காக டேனிஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த கடிதம் கிடைத்தவுடன் ரிலையன்ஸ் மூத்த அதிகாரி ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார். கடிதம் கொண்டு வந்தவரை கண்டுபிடிக்க ரிலையன்ஸ் அலுவலக சிசிடிவி பதிவை கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications