டெல்லி: 2-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்- போலீஸ் விசாரணை வளையத்தில் 13 ஆசிரியைகள்!
டெல்லி: டெல்லி மங்கோல்புரி மாநகராட்சி பள்ளியி 2-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அல்லது பள்ளி ஊழியர்களுக்குத்தான் தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து பலாத்கார சம்பவங்கள் பல வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. இந்நிலையில் டெல்லியில் மேலும் ஒரு சம்பவமாக 2-வது படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பிருக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் நெற்று 2 ஆசியர்கள் உட்பட 4 பேரை நேற்று போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் இன்று காலை 13 ஆசிரியைகள், 2 ஆசிரியர்கள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறுமி பலாத்காரம் தொடர்பாக 13 ஆசிரியைகளை போலீசார் துருவி துருவி விசாரித்தது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி நேற்று மாலை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது பற்றி கருத்து தெரிவித்த மருத்துவர் புனிதா மகாஜன், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications