மகா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை: ஜெயலலிதாவுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை

இது குறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்துக்களின் (சைவப்பெருமக்களின்) முக்கிய விழாவாக உள்ளது மகா சிவராத்திரி தினமாகும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், சமய நிறுவனங்களிலும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும், நான்கு கால பூஜையும் நடப்பது மகா சிவராத்திரி தினத்தில் தான். சிவபெருமான்-பார்வதி தேவியாருக்கு பிரியமான நாள் மகா சிவராத்திரி.
இந்த நாள் நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி மிகச்சிறப்புடையதாகும்.
சிவராத்திரி தினத்தன்று உண்ணாமல், உறங்காமல், கண் விழித்திருந்து, விரதம் இருந்து சிவபூஜை செய்வதும், கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஒவ்வொருவரும் தம் வாழ்வில் பண்பாடுடனும், மனிதத்தன்மையுடனும் இருந்து உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்திருந்து தூய ஆடைகள் அணிந்து திருநீரு பூசி சிவபெருமானை மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
மகா சிவாராத்திரி தினத்தன்று சிவனுக்கு இரவு முழுவதும் உரிய மந்திரமான நமசிவாயா மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தால் இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பது திருஞான சம்பந்த பெருமானின் ஆழமான உறுதியான கருத்தாகும்.
இப்படிப்பட்ட அருமையான மகா சிவாராத்திரி தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவித்தால் பக்தர்களுக்கு மிகுந்த நன்மையாக இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications