ஊழல் வழக்கு: டெல்லி கோர்டுக்கு விசாரணையை மாற்ற அன்புமணி மனு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அவர் முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்த வழக்கு விசாரணை, லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ஏற்கனவே தன் மீது இதேபோன்ற மற்றொரு வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருவதால், இந்த வழக்கையும் அங்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.சதாசிவம், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications