எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை வேண்டும் என்றே உயர்த்துகின்றவா?

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்படும், குறைக்கப்படும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து தங்கள் லாபம் உள்ளிட்டவற்றை மட்டும் கணக்கில் கொண்டு பெட்ரோல் விலையை உயர்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போட்டி கமிஷன் விசாரணை நடத்த உள்ளது.
இது குறித்து போட்டி கமிஷன் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால் அமைச்சகமோ பெட்ரோல் விலை நிர்ணயத்திற்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டது.
பெட்ரோல் விலை நிர்ணய விவகாரம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தவிருக்கிறோம் என்று போட்டி கமிஷன் தலைவர் அசோக் சாவ்லா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டாலும் விலை நிர்ணயித்தில் நடக்கும் குளறுபடிகள் தெரிந்தால் மக்கள் கொத்தித்துவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications