Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75% சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்- இலங்கை தூதர் விஷமப் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் ரகசிய பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21ம் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

வட இந்தியா பூர்வீகம்

வட இந்தியா பூர்வீகம்

`சிங்களர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்' என குறிப்பிட்டு அனுப்பிய இ-மெயில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இ-மெயில் தகவலில் 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு இ.மெயில்

ஊடகங்களுக்கு இ.மெயில்

பிரசாத் கரியவாஸத்தின் இ-மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ந்தேதி இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இந்த இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் கரியவாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசார இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

விஷமப்பிரச்சாரம்

விஷமப்பிரச்சாரம்

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத்கரிய வாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசியலுடன் விளையாட்டை கலப்பதா?

அரசியலுடன் விளையாட்டை கலப்பதா?

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரசாத் கரியவாஸம், அரசியலுடன் விளையாட்டை கலப்பது ஏற்புடையதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+