அம்மாவின் தேர்வைப் பார்க்க அவசரமாய் பிறந்த குழந்தை...
அசம்கார்: உத்தரபிரதேசத்தில் பள்ளி தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு, தேர்வு அறையில் குழந்தை பிறந்தது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது.
நேற்று இந்த பள்ளியில் பூனம் ஷானி என்ற மாணவியும் சமஸ்கிருத தேர்வு எழுத வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதுகுறித்து அறையில் இருந்த மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் உதவி கேட்டு போன் செய்தார். சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
அதேசமயம் அந்த மாணவிக்கும் வகுப்பறையிலேயே குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையும், தாயும் அந்த ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications