இலங்கை விமான அலுவலகத்துக்குள் புகுந்த மாணவர்கள் கைது… திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் இலங்கை விமான முன்பதிவு அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைப் பிரச்சினையினால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் நேற்றுதான் திறக்கப்பட்டன. சில கல்லூரிகளில் மாணவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
ஆனால் சேலம், திருச்சியில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் சத்தியகுமரன், வெட்டுபெருமாள் உள்ளிட்ட 11 மாணவர்கள் நேற்று காலை திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஐ.ஜி.அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே அமைச்சர் சல்மான் குர்ஷித் உருவபொம்மையை எரித்தனர்.
இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள இலங்கை நாட்டுக்கு சொந்தமான மிகின்லங்கா விமான டிக்கெட் முன்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டபடி திடீரென்று அலுவலகத்துக்கு உள்ளே புகுந்து தரையில் அமர்ந்தனர். இந்த அலுவலகத்தை இழுத்து மூடும் வரை போராடுவோம் என்று முழக்கமிட்டனர்.
அப்போது அங்கு வந்த செசன்சு கோர்ட்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, அங்கு அமர்ந்து இருந்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் வேனில் ஏற்றினார்கள். இதில் மொத்தம் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications